Wednesday, June 22, 2011

மெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி(வர்த்தி) ஏந்திட மெரினா நோக்கி வாரீர்



இலங்கையில் கடந்த 2009-ம் வருடம் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட (1,46,000) ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் தமிழர்களுக்காகவும், 
இதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 30000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும், 
80000 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக மாற்றப்பட்ட கொடுமைக்காகவும்,

இலங்கை கடற்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், 
காணம்ல்போன 700க்கும் மேற்பட்ட மீனவர்களுக்காவும், 
சிங்கள கடற்படையால் உடல் ஊனமுற்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அவர் அவர் குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்..

மெல்லிதயம் படைத்தோரே
மெழுகுதிரி எந்தி அஞ்சலி செலுத்த
மெரினா நோக்கி வாரீர்..

தேதி : ஜூன் 26, மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை
ஒருங்கிணைப்பு: மே 17 இயக்கம்.

ஜூன் 26 - சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் (International Day in Support of Victims of Torture)

தொடர்பான தளங்கள்:

No comments: